Sunday, June 20, 2010

ஏன் அழுகிறாய்

இயேசு அவளைப் பார்த்து ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.
யோவான் – 20:15
அன்று கல்லறையின் அருகில் நின்ற மரியாளை நோக்கி ஏன் அழுகிறாய் என்று கேட்ட இயேசு இன்று வேதனை நிமித்தம் அழுது புலம்பி கொண்டிருக்கிற உன்னையும் என்னையும் பார்த்து கேட்கிறார் ஏன் அழுகிறாய் என்று. ஐயோ என் வேதனை நீக்க வருவேன் என வாக்கு கொடுத்த வாக்கு மாறாத நேசரை காணவில்லையே என அவரை தேடி தோட்டத்தில் நின்று கதறி கொண்டிருக்கும் அருமை சகோதரனே சகோதரியே இதோ தோட்டகாரனாகிய இயேசு உன் அருகில் நின்று உன்னை நோக்கி கேட்கிறார் ஏன் அழுகிறாய் என்று.
அன்று வனாந்திரத்தில் இறச்சிக்காக அழுத ஜனங்களுக்கு சாப்பிடும் மட்டும் இறச்சி கொடுத்த தேவன் இன்று அழுது கொண்டிருக்கும் உன்னை பார்த்து கேட்கிறார் ஏன் அழுகிறாய் என்று.
ஐயோ இருதய பாரத்தின் நிமித்தமாக நான் அழுது கொண்டிருக்கிறேன். குடும்பத்தில் சமாதானம் இல்லை, கணவன் அல்லது மகன் குடித்து வெறித்து வீட்டில் கலகம் ஏற்படுவதினால் இருதயபாரத்தோடு காணப்படலாம் அல்லது கடன் தொல்லை காரணமாக, வேலை இல்லாமையினால், குழந்தை இல்லாமையினால் ஒருவேளை இருதய பாரத்தோடு காணப்படலாம், எத்தகைய பாரத்தோடு நீ இருந்தாலும் இதோ தோட்டகாரனாகிய இயேசு உன்னுடைய பாரத்தை ஏற்றி செல்வதற்காக கல்வாரி வண்டியோடு உன் அருகில் வந்து உன்னோடு கேட்கிறார் ஏன் அழுகிறாய் என்று இருதய பாரத்தை உள்ளில் வைத்துகொண்டு அவரை நோக்கும் சகோதரனே சகோதரியே அந்த பாரத்தை அந்த கல்வாரி வண்டியில் இறக்கி வைப்பாயா.
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன். (மத்தேயு – 11:28)

Wednesday, May 19, 2010

சீயோன்புரம் CSI




கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.

Tuesday, May 18, 2010

இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்
இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.
செப்பனியா 3 ம் அதிகாரம் 14,15 வசனங்களை நாம் படிக்கும் போது
14 சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலரே, ஆர்ப்பரியுங்கள்; எருசலேம் குமாரத்தியே, நீ முழுஇருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு.
15 கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.
ஆம் இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.
இனித் தீங்கைக் காணாதிருக்க நாம் என்ன செய்ய வேண்டும். இந்த இரு வசனத்தை பார்க்கும் போது தீர்க்கதரிசி நமக்கு முன்று காரியங்களை சுட்டி காட்டுகிறார.
முதலாவதாக 14 ம் வசனத்தில்
சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலரே, ஆர்ப்பரியுங்கள்; எருசலேம் குமாரத்தியே, நீ முழுஇருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு. எனவும்,
இரண்டாவதாக 14 ம் வசனத்தின் தொடக்கத்தில்
கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; எனவும்,
மூன்றாவதாக 14 ம் வசனத்தில்
இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; எனவும் பார்க்கிறோம்
இந்த முன்று காரியங்களும் நமக்குள் உண்டு என்றால் நிச்சயமாக இந்த வாக்குத்தத்தம் நம்மில் நிறைவேறும்.
முதலாவதாக
சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலரே, ஆர்ப்பரியுங்கள்; எருசலேம் குமாரத்தியே, நீ முழுஇருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு.

ஆம் சகோதரனே சாகோதரியே , நீ முழுஇருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரவேண்டுமாம் முழுஇருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரவேண்டுமானால் நம்முடைய இருதயம் எப்படி இருக்க வேண்டும்
சங்கீதம் 51-17 ல் தாவீது கூறுகிறார்
தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.
நம்முடைய இருதயம் நொறுக்கப்படவேண்டும்
சங்கீதம் 147:3 ல் இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், என பார்க்கிறோம்
அவர் நம் இருதயத்தை ஆராய்கிற கர்த்தர் எரேமியா 17:10 ல்
கர்த்தராகிய நானே……………, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.
ஆம் அவர் இருதயத்தை ஆராய்கிற கர்த்தர்
2 இராஜாக்கள் 22 ம் அதிகாரத்தில் இருதயம் நொறுக்கப்பட்ட ஒரு ராஜாவை காணலாம் 19, 20 வசனங்களை நாம் படிக்கும் போது
19 நான் இந்த ஸ்தலத்திற்கும் அதின் குடிகளுக்கும் விரோதமாக, அவர்கள் பாழும் சாபமுமாவார்கள் என்று சொன்னதை நீ கேட்டபோது, உன் இருதயம் இளகி, நீ கர்த்தருக்கு முன்பாக உன்னை தாழ்த்தி, உன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு, எனக்குமுன்பாக அழுதபடியினால் நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்.
20 ஆகையால், இதோ, நான் உன்னை உன் பிதாக்களண்டையிலே சேர்த்துக் கொள்ளுவேன்; நீ சமாதானத்தோடே உன் கல்லறையில் சேர்வாய்; நான் இந்த ஸ்தலத்தின்மேல் வரப்பண்ணும் சகல பொல்லாப்பையும் உன் கண்கள் காண்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதைச் சொல்லுங்கள் என்றாள்;
அவன் கர்த்தருக்கு முன்பாக தன் இருதயத்தை உடைததினால் இந்த ஸ்தலத்தின்மேல் வரப்பண்ணும் சகல பொல்லாப்பையும் உன் கண்கள் காண்பதில்லை என்று கர்த்தர் வாக்கு கொடுப்பதை பார்க்கலாம்
இருதயம் தேவனை மகிமைப்படுத்தவேண்டும்
ரோமர் – 1:21 ல் அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார்
அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.
நம் இருதய சிந்தனை எப்படி காணபடுகிறது நாம் நம்முடைய சிந்தனைகளினாலே வீணராக, தேவனை மகிமைப்படுத்தாமல் உணர்வில்லாதவர்களாக காணப்படுகின்றோமா! நம் இருதயம் இருளடைந்தது போகும் என்பதை மறந்து போகாதே
இருதயம் இருளடைந்தது போனால் முழுஇருதயத்தோடும் மகிழ்ந்து களிகூர முடியாது
சங்கீதம் 32:11 ல் தாவீது கூறுகிறார்
நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்துகளிகூருங்கள்; செம்மையான இருதயமுள்ளவர்களே, நீங்கள் எல்லாரும் ஆனந்த முழக்கமிடுங்கள்
சங்கீதம்- 33:21 ல்
அவருடைய பரிசுத்த நாமத்தை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் களிகூரும். என பார்க்கிறோம்
ஆம் அவருடைய பரிசுத்த நாமத்தை நாம் நம்பவேண்டும் கர்த்தர் தான் தேவனென்று விசுவசிக்க வேண்டும்.
சங்கீதம்- 13:5 ல்
நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும். என பார்க்கிறோம்
ஆம் அவர் மேல் விசுவாசம் இரூந்தால் மட்டுமே அவருடைய இரட்சிப்பினால் நாம் களிகூர முடியும்
நம்முடைய விசுவசம் எப்படி காணப்படுகிறது?
அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார் எபிரெயர் 11:6 ல்
விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.
தேவனுக்குப் பிரியமாக இருக்கவேண்டுமானால் நம்முடைய விசுவசம் எப்படி இருக்கவேண்டும்
யாக்கோபு – 2:14 ல் அப்போஸ்தலனாகிய யாக்கோபு கூறுகிறார்
என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா?
இன்னும் 20 தாவது வசனத்தில்
வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ?
என பார்க்கிறோம்
நம்முடைய விசுவசம் கிரியை உள்ளதாக இருக்கவேண்டும்
இன்னும் யாக்கோபு – 2:25,26 ம் வசனத்தை பார்க்கும்போது
25 அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டபோது, கிரியைகளிலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்?
26 அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.
ஆம் நம்முடைய விசுவசம் கிரியை உள்ளதாக இருக்கவேண்டும்
ஒருவேளை நான் கிறிஸ்துவுக்காக இத்தனை வைராக்கியமாக இருந்தேனே, இத்தனை வைராக்கியமாக இருந்தும் எனக்கு இந்த சோதனை ஏன் என கேட்க்கலாம்
1 பேதுரு 1:7 ல் பேதுரு கூறுகிறார்
அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.
ஆம் விசுவாசத்தில் சோதனை உண்டு, ஆயினும் நம்முடைய திராணிக்கு மேலாக அவர் சோதிக்காமல் அதிலிருந்து தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார் என அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார்
1 கொரிந்தியர் – 10:13 ல்
மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.
என பார்க்கிறோம்
ஆம் அவர் நம்முடைய விசுவாசத்தை சோதிக்கிற கர்த்தராக இருக்கிறார்.
அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார் 1 கொரிந்தியர் – 13:2 ல்
மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.
நாம் ஒன்றுமில்லை என்றால் எப்படி மகிழ்ந்து களிகூர முடியும், ஆகவே நாம் இருதயத்தில் அன்பு உள்ளவராயிருக்க வேண்டும்
1 கொரிந்தியர் – 13 ம் அதிகாரத்தில் பவுல் அன்பை பற்றி தெளிவாக கூறுகிறார். 3 ம் வசனம் முதல் 7 வரை படிக்கும் பொது
3 எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.
4 அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,
5 அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது,
6 அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.
7 சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.
எனவே இந்த அன்பு உள்ளத்தில் வந்து என்றால் நாம் முழு சமாதனத்தோடு மகிழ்ந்து களிகூர முடியும். எனினும் வெளியரங்கமாயிருக்கின்ற சில மாம்சத்தின் கிரியைகள் நம் இருதயத்தில் இரூந்தால் நாம் மகிழ்ந்து களிகூர முடியாது.
எனவே இருதயத்தில் அன்பு உள்ளவர்களாயிருந்து, கர்த்தரை முழுமனதோடு விசுவாசிக்கின்ற நாம், நம் இருதயத்தில் வெளியரங்கமாயிருக்கின்ற சில மாம்சத்தின் கிரியைகளை விட்டு விடவேண்டும். அப்போதுதான் நாம் முழுஇருதயத்தோடும் மகிழ்ந்து களிகூர முடியும்.
இந்த கிரியைகள் நம் இருதயத்தில் இரூந்தால் நாம் முழுஇருதயத்தோடு மகிழ்ந்து களிகூர முடியாதபடி நம்முடைய இருதயத்தை நெருக்கி கொண்டு இருக்கும். நம்முடைய விசுவாசத்தை , நம்முடைய அன்பை அது அழித்து கொண்டு இருக்கும்,
அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்தியருக்கு எழுதிய நிருபத்தில் இதை தெளிவாக கூறுகிறார்
கலாத்தியர் – 5 ம் அதிகாரம் 19 ம் வசனம் முதல் 21 ம் வசனம் வரை படிக்கும் பொது
19 மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
20 விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,
21 பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே;
நம்முடைய இருதயம் எப்படி காணப்படுகிறது?
கலாத்தியர் – 5 ம் அதிகாரம் 26 ம் வசனத்தில் பவுல் கூறுகிறார்
வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்.

ஆம் இந்த கிரியைகளை நம்முடைய இருதயத்தில் இருந்து மாற்ற வேண்டும்
நீதிமொழிகள் 27:4 ல்
உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்?
என பார்க்கிறோம்
ஆம் இத்தகைய கொடுமையுள்ள நிஷ்டூரமான செயல்கள் நம் இருதயத்தில் இரூந்தால் நிச்சயமாக நாம் சந்தோசமாக இருக்க முடியாது.
பிரசங்கி – 7:9 ல்
உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்.
என பார்க்கிறோம்
ஆம் நம் தேவன் கொடுமையுள்ள, நிஷ்டூரமான, மூடரின் இருதயத்தில் வசிக்க மாட்டார் என்பதை மறந்து போகாதே.
1 கொரிந்தியர் – 13:2 ல் பவுல் கூறுகிறார்
சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்;
எனவே நாம் இப்படிபட்ட துர்க்குண புத்தியிலே குழந்தைகளாயிராமல் இத்தகைய கிரியைகளை விட்டு விலக வேண்டும்.
ஆகவே நாம், நம் இருதயத்தில் வெளியரங்கமாயிருக்கின்ற சகல மாம்சத்தின் கிரியைகளை விட்டு விட்டு கலாத்தியர் – 5 ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள ஆவியின் கனிகளை நாம் தரித்துகொள்ள வேண்டும்.
ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்;
இந்த ஒன்பது நற்குணங்களும் நம் இருதயத்தில் காணப்படும் என்றால் நிச்சயமாக நாம் ஆர்ப்பரித்து முழுஇருதயத்தோடும் மகிழ்ந்து களிகூர முடியும்.
யோபு – 42:10 ல்
யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்.
என பார்க்கிறோம்

ஆம் அன்பானவர்களே நம்முடைய இருதயம் எப்படி காணப்படுகிறது? இத்தகைய ஆவியின் கனிகள் நம் இருதயத்தில் காணப்படுகின்றதா? அல்லது வெளியரங்கமாயிருக்கின்ற மாம்சத்தின் கிரியைகளுக்கு அடிமைப்பட்டு காணப்படுகின்றோமா?
அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; என கலாத்தியர் – 6 4 ல் பவுல் கூறுகிறார்
நாம், நம்முடைய கிரியையை சோதித்துப்பார்ப்போமா !!!!
இரண்டாவதாக
கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்;
ஆம் சகோதரனே சாகோதரியே, நம் ஆக்கினைகளை கர்த்தர் அகற்ற வேண்டும். கர்த்தர் நம் ஆக்கினைகளை அகற்ற வேண்டும் என்றால் முதலாவது நம்முடைய சாபம் மாற்றப்படவேண்டும்.
சாபம் மாற்றப்படவேண்டும் என்றால் முதலாவது நம்மிடம் உள்ள சாபத்தீடானது மாற்றப்படவேண்டும். அதாவது கர்த்தருக்கு பிரியம் இல்லாத செயல் நமிடம் உண்டு என்றால் அதை மாற்றவேண்டும்.
யோசுவாவின் புஸ்தகம் 6,7 ம் அதிகாரத்தை படிக்கும் போது
6 ம் அதிகாரத்தில் இஸ்ரவேலர் கர்த்தருக்கு மகிமை செலுத்தியதால் கர்த்தர் அவர்கள் சத்துருவை அவர்கள் கையில் ஒப்பு கொடுத்தார் என பர்கேறோம். ஜனங்கள் யுத்தம் செய்யவில்லை மாறக ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள் அலங்கம் இடிந்து விழுந்தது
20,21 ம் வசனத்தை படிக்கும்பொது
20 எக்காளங்களை ஊதுகையில், ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள்; எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடே முழங்குகையில், அலங்கம் இடிந்து விழுந்தது; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராகப் பட்டணத்தில் ஏறி, பட்டணத்தைப்பிடித்து,
21 பட்டணத்திலிருந்த புருஷரையும் ஸ்திரீகளையும் வாலிபரையும் கிழவரையும் ஆடுமாடுகளையும் கழுதைகளையும் சகலத்தையும் பட்டயக்கருக்கினால் சங்காரம் பண்ணினார்கள்.
என பார்க்கிறோம்
இங்கு கர்த்தர் அவர்களுக்கு ஒரு கட்டளை கொடுத்தார்
6 ம் அதிகாரம் 17, 18, 19 தாம் வசனங்களில்
17 ஆனாலும் இந்தப்பட்டணமும் இதிலுள்ள யாவும் கர்த்தருக்குச் சாபத்தீடாயிருக்கும்; நாம் அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் வேசி மறைத்துவைத்தபடியால், அவளும் அவளோடே வீட்டுக்குள் இருக்கிற அனைவருமாத்திரம் உயிரோடிருக்கக்கடவர்கள்.
18 சாபத்தீடானதில் ஏதாகிலும் எடுத்துக்கொள்ளுகிறதினாலே நீங்கள் சாபத்தீடாகாதபடிக்கும், இஸ்ரவேல் பாளயத்தைச் சாபத்தீடாக்கி அதைக் கலங்கப்பண்ணாதபடிக்கும், நீங்கள் சாபத்தீடானதற்குமாத்திரம் எச்சரிக்கையாயிருங்கள்.
19 சகல வெள்ளியும் பொன்னும், வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்யப்பட்ட பாத்திரங்களும், கர்த்தருக்குப் பரிசுத்தமானவைகள்; அவைகள் கர்த்தரின் பொக்கிஷத்தில் சேரும் என்றான்.
7 ம் அதிகாரம் 1 ம் வசனத்தை படிக்கும்பொது
இஸ்ரவேல் புத்திரர் சாபத்தீடானதிலே துரோகம்பண்ணினார்கள்;
என பார்க்கிறோம்
ஆம் கர்த்தருக்கு பிரியம் இல்லாத செயல் நமிடம் உண்டா?
இஸ்ரவேல் புத்திரர் சாபத்தீடானதிலே துரோகம்பண்ணினதால் எரிகோவின் கோட்டையை கைபற்றிய இஸ்ரவேலர் சிறிய பட்டணமாகிய ஆயியின் மனுஷருக்கு முன்பாக முறிந்தோடினார்கள்
4 ம் வசனத்தை படிக்கும்பொது
ஆனாலும் அவர்கள் ஆயியின் மனுஷருக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.
என பார்க்கிறோம்
ஆம் கர்த்தர் உன் சத்துருக்களை உன் நடுவிலிருந்து விலக்க வேண்டுமானால் கர்த்தருக்கு பிரியம் இல்லாத செயல் நம்மிடம் உண்டு என்றால் அதை விட்டு விலக வேண்டும்.
யோசுவா – 7 ம் அதிகாரம் 13 ம் வசனத்தில் இதை காணலாம்
நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து விலக்காதிருக்குமட்டும், நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக் கூடாது என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
ஆம் சாபத்தீடானது நம் நடுவிலிருந்து விலக்காதிருக்குமட்டும் நம் ஆக்கினை நம்மை விட்டு போகாது என்பதை மறந்து போகாதே.
யோபு – 31 ம் அதிகாரம் 3 ம் வசனத்தை படிக்கும்பொது
மாறுபாடானவனுக்கு ஆபத்தும், அக்கிரமச் செய்கைக்காரருக்கு ஆக்கினையுமல்லவோ கிடைக்கும்.
ஆம் நம்முடைய செய்கை எப்படி காணபடுகிறது அக்கிரமச்செய்கைக்காரராக காணபடுகிறோமா?
நீதிமொழிகள் 17:21 ல்
மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; புரட்டு நாவுள்ளவன் தீமையில் விழுவான்.
என பார்க்கிறோம்
இன்னும் நீதிமொழிகள் 12:8 ல்
மாறுபாடான இருதயமுள்ளவனோ இகழப்படுவான்.
ஆம் நம்முடைய இருதயம், நம்முடைய நாவு எப்படி காணப்படுகிறது மாறுபாடான, புரட்டு நாவுள்ளவனாக காணபடுகிறோமா?
இன்னும் நீதிமொழிகள் 6 ம் அதிகாரத்தில் கர்த்தர் வெறுக்கும் ஆறு காரியங்களை நாம் பார்க்கலாம்
நீதிமொழிகள் 6 :16-19
16 ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள்.
17 அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை.
18 துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங் கால்,
19 அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.
ஆம் நம்முடைய நிலமை எப்படி காணப்படுகிறது கர்த்தர் வெறுக்கும் காரியங்கள் நம்மில் காணப்படுகின்றதா?
இன்னும் நீதிமொழிகள் 19:5 ல்
பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை.
என பார்க்கிறோம்
நாம், நம்முடைய நிலமையை சோதித்துப்பார்ப்போமா !!!!
கலாத்தியர் – 3:13 ல்
மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்லாக்கி மீட்டுக்கொண்டார்.
என பார்க்கிறோம்
ஆம் நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டு; நம்முடைய சாபத்திற்காக அவர் சாபமானார்.
இந்த இயேசுவை நம் உள்ளத்தில் ஏற்றுக்கொன்டல் சகல சாபத்தையும் நம்மை விட்டு மாற்ற அவர் வல்லவராக இருக்கிறார்.
முதலாவதாக இந்த இயேசுவை நம் சொந்த இரட்ச்சகராக ஏற்றுகொள்ள வேண்டும்,
யார் இந்த இயேசு
ஆதி மனிதர்களை சபத்திற்கு உட்படுத்திய துஷ்ட சத்துருவாம் பிசாசானவனின் தலையை நசுக்கி மனித குலத்தை சபத்திலின்று விடுவிக்க வந்த கிறிஸ்து
ஆதியாகமம் 3:15 ல்
கர்த்தர் துஷ்ட சத்துருவாம் சர்ப்பத்தைப்பார்த்து இவ்விதமாய் கூறுகிறார்
“அவர் உன் தலையை நசுக்குவார்”
யார் அவர்
அவர்தான் இந்த இயேசு
யோவான் 1:29 ல் யோவான் கூறுகிறார்
இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
மீகா 5:5 ல் மீகா தீர்க்கதரிசி கூறுகிறார்
இவரே சமாதான காரணர்;
ஏசாயா 53:5 ல் ஏசாயா தீர்க்கதரிசி கூறுகிறார்
நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
ஆம் நம்முடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் நொறுக்கப்பட்ட இவரே உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி, இவரே சமாதான காரணர்; இந்த இயேசுவை நம் சொந்த இரட்ச்சகராக ஏற்றுகொள்ள வேண்டும்,
இந்த இயேசுவை ஏற்றுக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்
முதலாவதாக நம்முடைய இருதய கதவை திறக்கவேண்டும்
வெளிப்படுத்தின விசேஷம் 3:20 ம் வசனத்தை படிக்கும்பொது
இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
ஆம் வாசற்படியிலே நின்று தட்டுகின்ற இந்த இயேசுவை நம் இருதயமாகிய அந்த வீட்டிற்குள் பிரவேசிக்க நம்முடைய இருதய கதவை திறப்போமா?
அப்போஸ்தலனாகிய பவுல் எபிரெயர்- 10:22 ல் கூறுகிறார்
துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.
ஆம் வாசற்படியிலே நின்று தட்டுகின்ற இந்த இயேசுவை உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் அவரை ஏற்று கொண்டால் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்க அவர் வல்லவராக இருக்கிறார்
இதோ சங்கீதக்காரன் கூறுகிறான்
சங்கீதம்- 139:23,24 ல்
23 தேவனே என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும், என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.
24 வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும்.
சங்கீதக்காரனைபோல நாமும் கேட்போமா, அப்பா! என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும், என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும்.
1 யோவான் 3:20 ல் அப்போஸ்தலனாகிய யோவான் கூறுகிறார்
நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.
ஆம் நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்காதபடி நம்முடைய இருதயத்தை நாம் சோதித்து பார்போமா
மூன்றாவதாக
இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்;
1 யோவான் 4:4 ல் அப்போஸ்தலனாகிய யோவான் கூறுகிறார்
பிள்ளைகளே, நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.
ஆம் இந்த உலகத்தை ஜெயிக்க வேண்டுமானால் இந்த பெரியவர் நம்மோடு கூட வேண்டும்.
2 நாளாகமம் ம் அதிகாரத்தை படிக்கும் போது
தேவனுடைய ஆவியானவர் ஓதேதின் குமாரனாகிய அசரியாவின் மூலமாக கூறுகிறார்
2 நாளாகமம் 20: அதிகாரம் 2 ம் வசனத்தை படிக்கும்பொது
சகல மனுஷரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்.
ஆம் நாம் அவரை தேடினால் அவர் நிச்சயமாக நம்மோடு இருப்பார்.
இந்த பெரியவராம் பாலகன் இயேசுவை தேடுவோமா?
மீகா 5:5 ல் மீகா தீர்க்கதரிசி கூறுகிறார்
எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.
ஆம் துஷ்ட சத்துருவாம் சர்ப்பத்தின் தலையை நசுக்கி மனித குலத்தை சபத்திலின்று விடுவிக்க வந்த பெரியவராம் பாலகன் இயேசு நம் நடுவில் இருக்க வேண்டும்
யோவேல் 2:13 ல் யோவேல் தீர்க்கதரிசி கூறுகிறார்
நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்.
ஆம் நம்முடைய தீங்குக்கு மனஸ்தாபப்படுகிற கர்த்தர் அவர்
ஏசாயா தீர்க்கதரிசி கூறுகிறார் நம்மோடு இருக்கும் தேவன்
ஏசாயா – 7:14 ,மற்றும் மத்தேயு – 1:23 இதை காணலாம்
மத்தேயு – 1:23 ல்
அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்
யோவேல் 2:21 ல் தீர்க்கதரிசி கூறுகிறார்
தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு;
ஆம் சகோதரனே சாகோதரியே , பயப்படாதே நீ முழுஇருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு இதோ ஒரு சந்தோஷமான செய்தி, நம்முடைய சாபத்தை நீக்கி, நம் ஆக்கினைகளை அகற்றி, நம்மோடு கூட நம் இருக்கும் பெரியவராம் பாலகன் நம்மோடு கூட உண்டு.
யாக்கோபு – 4:8 ல் அப்போஸ்தலனாகிய யாக்கோபு கூறுகிறார்
தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.
ஆம் பண்டிகைகளை கொண்டாடிய நாம் அவரோடு சேர்ந்து காணப்படுகின்றோமா அல்லது நம்முடைய கைகளை அநீதிக்கும், நம்முடைய இருதயங்களைப் பாவத்துக்கும், ஒப்புகொடுத்து இருமனமுள்ளவர்களாக கானப்படுகின்றோமா?
இதோ ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து யோவான் சுவிஷேசத்தில் இவ்விதமாக சொல்லுகிறார்
யோவான் 14:23 ல்
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.
ஆம் நாம் அவரோடு அன்பாய் இருந்தால் அவர் நம்மிடத்தில் வந்து நம்மோடு கூட இருப்பார். ஒருவேளை நாம் கேட்கலாம் நாம் எப்படி அன்பாய் இருக்க வேண்டு என்று
யோவான் 14:15 ல் அவரே சொல்லுகிறார்
நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
ஆம் நாம் அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டால் அவர் வந்து நம்மோடு கூட வாசம்பண்ணுவார் மாத்திரம் அல்ல நம்மோடு கூட நமக்கு சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனையும் தருவார். யோவான் 14:16 ல் இதை காணலாம்
யோவான்-14:16
நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அபொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.
ஆம் அன்பானவர்களே யோவான் - 15 அதிகாரம் 4 முதல் படிக்கும்பொது மீண்டும் இதை தெளிவாக கூறுகிறார் அவரில் நிலைத்திருந்தால் அவர் நம்மில் நிலைத்திருப்பார்.
4 என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.
5 நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.

ஆம் அவர் நம்நடுவில் நிலைத்திருக்க வேண்டுமானால் நாம் அவரில் நிலைத்திருக்கவேண்டும்.
நாம் அவரில் நிலைத்திருக்கின்றோமா?
உபாகமம் 10 அதிகாரம் 12,13 ம் வசன ங்களை படிக்கும்பொது
12 இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து,
13 நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.
ஆம் சகோதரனே சாகோதரியே அவர் உன் நடுவில் நிலைத்திருந்து உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கி, இனி நீ தீங்கைக் காணாதபடி உனக்கு நன்மையுண்டாகவே உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.
உபாகமம் 10 -16 ல் படிக்கும்பொது
16 ஆகையால் நீங்கள் இனி உங்கள் பிடரியைக் கடினப்படுத்தாமல், உங்கள் இருதயத்தின் நுனித்தோலை விருத்தசேதனம்பண்ணுங்கள்.
ஆம் உபாகமம் 10 -16 ல் சொல்லியிருப்பது போல இனி நாம் நம்முடைய இருதயத்தை கடினப்படுத்தாமல் இருதயத்தை அவருக்கு திறப்போமா
ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக கர்தர் உரைக்கிறார்
ஏசாயா - 45:7 ல்
ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்.
ஆம் சகோதரனே சாகோதரியே சகலத்தைம் படைத்து சகலத்தைம் செய்கிற கர்த்தரிடத்தில் நம் இருதயத்தை பரிபூரணமாக ஒப்படைப்போம். நம் நடுவில் இரூந்து, நம் ஆக்கினைகளை அகற்றிய கர்த்தரிடத்தில் முழு மனதோடும், முழுஇருதயத்தோடும் மகிழ்ந்து களிகூருவோம்.
தீர்க்கதரிசி மூலமாக கர்தர் உரைக்கிறார்
சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலரே, ஆர்ப்பரியுங்கள்; எருசலேம் குமாரத்தியே, நீ முழுஇருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு.
கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.
ஆம் சகோதரனே சாகோதரியே இருதயத்தை கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து அவரில் களிகூர்ந்த. நீ இனித் தீங்கைக் காண்பதில்லை
கர்த்தர் தாமே நம் அனைவரயும் ஆசிர்வதிப்பாராக ஆமென் ……..

தேவ அன்பு

அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.
1 யோவான் – 2:5
பாருங்கள் அப்போஸ்தலனாகிய யோவான் கூறுகிறார் அவருடைய (கிறிஸ்துவினுடைய) வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும் என்று. கிறிஸ்துவின் அன்பு எப்படிபட்டது என்று அவரே கூறுகிறார் 3 ம் அதிகாரம் 16 முதல் 18 வரை படிக்கும் போது
16 அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.
17 ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?
18 என் பிள்ளைகளே, வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.
இந்த நாட்களில் நம்முடைய அன்பு எப்படி காணப்படுகிறது தேவ அன்பு நம்மிடம் காணப்படுகிறதா, நாம் நம்மை தாமே சிந்திக்க கடமைபட்டிருக்கிறோம்………….. ஒருவேளை நாம் நம்முடைய சகோதரனுக்காக ஜீவனை கொடுக்காவிட்டாலும் நம் சகோதரனின் கஸ்டத்திலாவது உதவி செய்கிறவர்களாக கானப்படுகிறோமா.
ரோமர் 13;8 ல் பார்க்கும்போது
ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்.
பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான் என பார்க்கிறோம்
அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது. என ரோமர் 13:10 ல் பார்கிறோம்.
பிறருக்கு கெடுதல் செய்யாத இந்த அன்பு நம்மில் காணப்படுகிறதா?
ஆதியிலே தேவன் வழங்கிய பத்து கட்டளைகளில் பிராதன கட்டளை எது என பார்ப்போமானால்
உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.
இதை மத்தேயு – 22:39 மற்றும் மாற்கு – 12:31 ம் வசனங்களில் காணலாம்.
இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாயிருக்கிற யூதா கூறுகிறார் கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெற தேவனுடைய அன்பிலே நம்மை காத்துக்கொள்ள வேண்டும் என்று.
யூதா 1:21 ஐ படிக்கும் போது
தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்திய ஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்.
தேவனுடைய அன்பிலே நித்திய ஜீவனுக்கேதுவாக காத்திருப்போமா
நம்மிடத்தில் அன்புகூர்ந்து தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
கர்த்தர் தாமே நம் அனைவரயும் ஆசிர்வதிப்பாராக ஆமென் ……..

Monday, May 10, 2010

யார் நீ?

அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதின முதலாம் நிருபம் 1 ம் அதிகாரம் 15 ம் வசனத்தை பார்க்கும்போது
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்
என படிக்கிறோம், கிறிஸ்துவுக்காக எல்லாம் குப்பை என்று எண்ணி எல்லாவற்றையும் தூக்கி எறிந்து தான்னையே அர்பணித்த பவுல் கூறுகிறார் தான்னை பாவிகளிலும் பிரதான பாவி என்று
லூக்கா 5 தாம் அதிகாரம் 8 டாம் வசனத்தில் பேதுரு கூறுகிறார் நான் பாவியான மனுஷன் என்று
சீமோன் பேதுரு அதைக்கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும் என்றான்.
லூக்கா – 18 டாம் அதிகாரத்தில் இயேசு இரண்டு பேரை பற்றி கூறுகிறார் 10 தாம் வசனம் முதல் 14 ம் வசனம் வரை படிக்கும்போது
10 இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணுபம்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.
11 பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
12 வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.
13 ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு; தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.
14 அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
இன்றைக்கு நாம் எந்த நிலமையில் காணப்படுகின்றோம். அந்த பரிசேயனை போல நான் பரிசுத்தவான் என்று நம்மை நாமே பெருமை பாராட்டி கொண்டு இருக்கின்றோமா. அல்லது பவுலை போல, பேதுருவை போல , இந்த ஆயக்கரனை போல நம்மை பாவி என்று அற்பணிக்கிண்றோமா? அருள்நாதர் கூறுகின்றார் பெருமை பாரடினவன் அல்ல பாவியே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று
ரோமர் 3:23 ல் பவுல் கூறுகிறார்
எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி.
ஆம் நீதிமான் யாரும் இல்லை எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமை அற்றவர்களாகி விட்டோம்
சங்கீதம் 51:5 ல் பார்க்கும்போது
இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள் என்றும்
நீதிமொழிகள் - 20:9 ல்
என் இருதயத்தைச் சுத்தமாக்கினேன், என் பாவமறத் துப்புரவானேன் என்று சொல்லத்தக்கவன் யார்?
என்றும் படிக்கிறோம்
இன்றைக்கு நாம் யார்? எந்த நிலமையில் காணப்படுகின்றோம் ஆயக்கரனை போல நான் பாவி என்று அவர் சமுகத்தில் ஒப்புகொள்ளுவோமா?
லூக்கா 5:32 ல்
நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்.
பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்த இயேசுவின் கையில் அப்பா நான் பாவிகளிலும் பிரதான பாவி என்று நம்மை ஒப்புக்கொடுப்போமா? கர்த்தர் நம் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக.
ஆமென்

Tuesday, April 27, 2010

மனவிருப்பம்

அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.
சங்கீதம் – 20:4
என்ன அருமையான வாக்குத்தத்தம், கர்த்தர் நம்முடைய மன விருப்பத்தின் படி நமக்கு தந்தருள வல்லவராக இருக்கிறார். நம்முடைய மனவிருப்பம் என்ன? நமது ஆலோசனைகளையெல்லாம் எப்படி காணப்படுகிறது?
நம்முடைய மன விருப்பம் கர்த்தருக்கு ஏற்றதாக காணப்படுகிறதா?
உபாகமம் 30:15 ல் மோசே இரண்டு காரியத்தை இஸ்ரவேல் ஜனத்துக்கு முன்பாக வைப்பதை பார்க்கலாம்
இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன்.
இன்றைக்கும் இந்த இரண்டு காரியங்களும் தேவன் நம் முன்பாக வைத்து இருக்கிறார், நம்முடைய மன விருப்பம் எதை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது. நம்முடைய மனவிருப்பம் ஜீவனை நோக்கியா அல்லது மரணத்தை நோக்கியா, நம்மை நாமே சிந்திக்க கடமை பட்டிருக்கிறோம்.
நீதிமொழிகள் 16 ம் அதிகாரம் 25 ம் வசனத்தை படிக்கும் போது இவ்விதமாக கூறப்பட்டுள்ளது
மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரணவழிகள்.
மத்தேயு 26:50 ல் அருள்நாதர் யூதாசை பார்த்து இப்படி கூறுகிறார்
இயேசு அவனை (யூதாசை) நோக்கி: சிநேகிதனே என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார்.
இன்று நம்மை பார்த்து கேட்கிறார் சிநேகிதனே என்னத்திற்காக வந்திருக்கிறாய், உன்னுடைய மன விருப்பம் என்ன என்று. நாம் என்ன பதில் சொல்லுகிறோம் யூதாசை போல நானும் உம்மை சிலுவையிலறைய, காட்டிகொடுக்க வந்தேன் அதுவே எனது மனவிருப்பம் என்று சொல்லுவோமா, அல்லது அப்பா என்னையே உம்மிடம் ஒப்படைக்கிறேன் ஜீவ வழியை எனக்கு காண்பியும் அதுவே எனது மனவிருப்பம் என்று சொல்லுவோமா. உன்னுடைய மனவிருப்பம் எதுவானாலும் நியாயத்தீர்ப்பு என்பது ஒன்று உண்டு என்பதை மறந்து போகாதே. இதோ எசேக்கியேல் தீர்கத்தரிசி மூலமாக கர்த்தர் எச்சரிக்கிறார் நம் ஒவ்வொருவரையும் அவனவன் வழிகளின்படியே, அவனவன் மனவிருப்பத்தின் படியே நியாயந்தீர்ப்பேனென்று.
எசேக்கியேல் 33:20 ல் ம் வசனத்தை படிக்கும் போது
நீங்களோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறீர்கள், இஸ்ரவேல் வீட்டாரே நான் உங்களில் ஒவ்வொருவனையும் அவனவன் வழிகளின்படியே நியாயந்தீர்ப்பேனென்று சொல் என்றார்.
துன்மார்க்கனுடைய வழி கர்த்தருக்கு அருவருப்பானது; நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார். நீதிமொழிகள் :15:9
கர்தர் தாமே நம் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக ஆமென்

Monday, April 19, 2010

யார் அந்த சத்துரு?

மத்தேயு 5:44 லை படிக்கும் போது
44 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
ஆம் அன்பானவர்களே நம் ஆண்டவர் சொல்லுகிறார் உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்
லூக்கா 6:17,25 தாம் வசனங்களிலும் இதை காணலாம்.
ஒரு வேளை நாம் கேட்கலாம் எனக்கு சத்துரு யார்? இன்னும் ஒரு வேளை நாம் நினைக்கலாம் எனக்கு சத்துரு பிசாசானவன் என்று, என் ஆண்டவர் கூறுகிறார் சத்துருக்களைச் சிநேகியுங்கள் என்று. ஆண்டவர் ஒருபோதும் பிசாசை சிநேகியுங்கள் என்று சொல்வதில்லை அப்படியானால் நமக்கு சத்துரு யார்?
மத்தேயு 10:36 ல் அருள்நாதர் கூறுகிறார்
ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.
காரணம் என்ன? நம்மிடம், நம் இருதயத்தில் மன்னிக்கும் மனப்பான்மை இல்லை. நம்மிடம் கோபத்தின் ஆவி உள்ளதால் நம் சகோதரர்கள் செய்யும் சிறிய தவறை கூட பொறுக்கமுடியாமல் நம் சகோதரரை சத்துருவாக காண்கிறோம்
யாக்கோபு 1:20 ல் பார்க்கும்போது
மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.
ஆம் நம்முடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாது. மாறாக நம்முடைய கோபத்தின் நிமித்தமாக பகை நெஞ்சில் குடிகொள்கிறது, மன்னிக்கும் மனப்பான்மை அற்றவர்களாய், நம் சகோதரர் மீதுள்ள பொறாமையினால், பொறுமை இழந்து நம் சகோதரரை சத்துருவாக காண்கிறோம்
நீதிமொழிகள் – 27:4 ல் பார்க்கும்போது
உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்?
ஆம் கோபத்தின் உக்கிரத்தால், மன்னிக்கும் மனப்பான்மை அற்ற நாமே நமக்கு சத்துரு என்பதை மறந்து போகாதே
லூக்கா - 17:3 ல் அருள்நாதர் கூறுகிறார்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக.
தன்னை கொலை செய்த தன் ஜனத்தை மன்னிக்க, பிதாவினிடத்தில் வேண்டிய அருள்நாதர் இயேசுவின் பின் செல்கின்ற நாம் நம் சகோதரர் செயும் சிறிய தவறை மன்னிப்போமா
மத்தேயு 6:14 ல் அருள்நாதர் கூறுகிறார்
மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.
கர்த்தர் தாமே நம் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக ஆமென்